தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு – வகுப்பறைகளில் தூய்மை பணிகள் மும்முரம்!!

 


தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு – வகுப்பறைகளில் தூய்மை பணிகள் மும்முரம்!!

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறக்க ஏற்ற சூழல் இல்லாத காரணத்தால் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. பள்ளிகள் திறக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதால் வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


பள்ளிகள் திறப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

இதன்படி பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. தற்போது 3 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் 70% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்கலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் செயல்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்து கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது பள்ளிகள் திறக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதால் பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி மற்றும் பள்ளி தூய்மைப் பணியாளர்கள் இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சுகாதாரப் பணிகள் நடைபெற்றன. வகுப்பறைகளில் சுத்தம்செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

TNTET 2020 Syllabus for Paper 2

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,