அரியர் மாணவர்கள் All Pass அறிவித்த பல்கலைக்கழகம் மாணவர்கள் மகிழ்ச்சி
பெருந்தொற்று பரவல் காரணமாக முதலமைச்சர் பழனிசாமி இறுதியாண்டு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
அரியர் பாடத்திற்குக் கட்டணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று முதல்வர் பிறப்பித்த உத்தரவுக்கு அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது.
அரசின் அறிவிப்பை அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டது என உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்தார்
அரசு எடுக்கும் முடிவுகளை 13 பல்கலைக்கழக துணை வேந்தர்களில் சூரப்பா ஒருவர் மட்டுமே ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட மற்ற பல்கலை கழகங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்றனர்.
அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறியியல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.
Comments
Post a Comment