கல்லூரி மாணவர்களுக்கு ஆன்-லைன் தேர்வு... பல்கலைக்கழகத்தின் அசத்தல் அறிவிப்பு!
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்கத்தா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிித்துள்ளது. calcutta universityகொரோனா அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஐந்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை.
இதனையடுத்து கல்லூரியில் முதலாண்டு, இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் தேர்வு நடத்தப்படாமலேயே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்
அதேசமயம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) கண்டிப்பாக கூறிவிட்டது.
இதனையடுத்து, தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் எனவும், மாணவர்கள் மையங்களுக்கு நேரில் வந்து தேர்வுகளை எழுத வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் பிரபல உயர் கல்வி நிறுவனமான கல்கத்தா பல்கலைக்கழகம் அசத்தலான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.சி. பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், " கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படும்.
ஆன்-லைன் முறையில் நடத்தப்படும் இத்தேர்வுகளின் முடிவுகள் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்படும்" என்று கல்கத்தா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment