கல்லூரி மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் கோரிக்கை


கல்லூரி மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் கோரிக்கை




கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி பாடத் திட்டங்களை குறைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கல்லூரி மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கு வரும் செமஸ்டருக்கான பாடத்திட்டங்களை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால், பாடத் திட்டங்களை குறைத்து வரைமுறை செய்து தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேபோல பாடத் திட்டங்களுடன் சேர்த்து வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் எத்தனை மதிப்பெண்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட முழு விவரங்களையும் முன்கூட்டியே அரசு வெளியிட்டால் திட்டமிட்டு பாடம் நடத்த ஏதுவாக இருக்கும் எனவும் வலியுறுத்தி இருக்கின்றனர்.



Comments

Popular posts from this blog

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,

TNTET 2020 Syllabus for Paper 2