தேர்வுகளை நடத்துவது தொடர்பாக 640 பல்கலைக்கழகங்கள் பதிலளித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது
தேர்வுகளை நடத்துவது தொடர்பாக 640 பல்கலைக்கழகங்கள் பதிலளித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
உயர்கல்வி இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. நேரடியாகவோ, இணைய வழியாகவோ தேர்வுகளை நடத்தலாம் என அறிவுறுத்தியது.
கொரோனா சூழலில் தேர்வுகளை நடத்த முடியாது என மகாராஷ்டிரம், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.
இந்நிலையில் தேர்வு நடத்துவது பற்றிய நிலையைத் தெரிவிக்கப் பல்கலைக்கழகங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியது. இதற்கு 640 பல்கலைக்கழகங்கள் பதில் அளித்துள்ள நிலையில் அவற்றில் தேர்வை நடத்திவிட்டதாகவோ, நடத்த இருப்பதாகவோ 454 பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.
177 பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளன.
தேர்வுகளை நடத்துவது தொடர்பாக 640 பல்கலைக்கழகங்கள் பதிலளித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
உயர்கல்வி இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. நேரடியாகவோ, இணைய வழியாகவோ தேர்வுகளை நடத்தலாம் என அறிவுறுத்தியது.
கொரோனா சூழலில் தேர்வுகளை நடத்த முடியாது என மகாராஷ்டிரம், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.
இந்நிலையில் தேர்வு நடத்துவது பற்றிய நிலையைத் தெரிவிக்கப் பல்கலைக்கழகங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியது. இதற்கு 640 பல்கலைக்கழகங்கள் பதில் அளித்துள்ள நிலையில் அவற்றில் தேர்வை நடத்திவிட்டதாகவோ, நடத்த இருப்பதாகவோ 454 பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.
177 பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளன.
Comments
Post a Comment